அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
1 :
அருணாசலம் என அகமே நினைப்பவர்
அகத்தை வேரறுப்பாய் அருணசலா ! (அருணாசலசிவ ..)
2 :
அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று
அபின்னமாய் இருப்போம் அருணாசலா ! (அருணாசலசிவ ..)
3 :
அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய்
அமர்வித்து என்கொல் அருணாசலா ! (அருணாசலசிவ ..)
4-
ஆருக்கா எனை அண்டனை அகற்றிடில்
அகிலம் பழித்திடும் அருணாசலா ! (அருணாசலசிவ ..)
5 :
இப்பழி தப்பு, உனை ஏன் நினைப்பித்தாய்
இனியார் விடுவார் அருணாசலா ! (அருணாசலசிவ ..)
6 :
ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய்
இதுவோ உனது அருள் அருணாசலா ! (அருணாசலசிவ ..)
7 :
உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல்
உறுதியாய் இருப்பாய் அருணாசலா ! (அருணாசலசிவ ..)
8 :
ஊர் சுற்றும் உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட
உன் அழகைக் காட்டு அருணாசலா ! (அருணாசலசிவ ..)
9 :
எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில்
இதுவோ ஆண்மை அருணாசலா ! (அருணாசலசிவ ..)
10 :
ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க
இது உனக்கு அழகோ அருணாசலா ! (அருணாசலசிவ ..)
11 :
ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது
அகத்தில் நீ இலையோ அருணாசலா ! (அருணாசலசிவ ..)
12 :
ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார்
உன் சூதேயிது அருணசலா ! (அருணாசலசிவ ..)
13 :
ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய்
உனை யார் அறிவார் அருணாசலா (அருணாசலசிவ ..)
14 :
ஔவை போல் எனக்குன் அருளைத் தஎது எனை
ஆளுவது உன் கடன் அருணாசலா (அருணாசலசிவ ..)
15 :
கன்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக்
காணுவது எவர் பார் அருணாசலா (அருணாசலசிவ ..)
16 :
காந்தம் இரும்பு போல் கவர்ந்து எனை விடாமல்
கலந்து எனோடு இருப்பாய் அருணாசலா (அருணாசலசிவ ..)
17 :
கிரி உரு ஆகிய கிருபைக் கடலே
கிருபை கூர்ந்து அருளுவாய் அருணாசலா (அருணாசலசிவ ..)
18 :
கீழ்மேல் எங்கும் கிளர் ஒளி மணி என்
கீழ்மையைப் பாழ்செய் அருணாசலா (அருணாசலசிவ ..)
19 :
குர்றம் முற்று அறுத்து எனைக் குணமாய்ப் பணித்தாள்
குரு உருவாய் ஒளிர் அருணாசலா (அருணாசலசிவ ..)
20 :
கூர்வாட் கண்ணியர் கொடுமையில் படாது அருள்
கூர்ந்து எனைச் சேர்ந்து அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
21 :
கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமும் இரங்கிலை
அஞ்சல் என்றே அருள் அருணசலா (அருணாசலசிவ ..)
22 :
கேளாது அளிக்கும் உன் கேடு இல் புகழைக்
கேடு செய்யாது அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
23 :
கையினில் கனி உன் மெய்ரசம் கொண்டு உவகை
வெறி கொள அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
24 :
கொடியிட்டு அடியரைக் கொல் உனைக் கட்டிக்
கொண்டு எஙன் வாழ்வேன் அருணாசலா (அருணாசலசிவ ..)
25 :
கோபம் இல் குணத்தோய் குறியாய் எனைக்கொளக்
குறை என்செய்தேன் அருணாசலா (அருணாசலசிவ ..)
26 :
கௌதமர் போற்றும் கருணை மாமலையே
கடைக்கணித்து ஆள்வாய் அருணாசலா (அருணாசலசிவ ..)
27 :
சகலமும் விழுங்கும் கதிர் ஒளி இன(ன்) மன
சலசம் அலர்த்தியிடு அருணாசலா (அருணாசலசிவ ..)
28 :
சாப்பாடு உன்னைச் சார்ந்து உணவா யான்
சாந்தமாய்ப் போவன் அருணாசலா (அருணாசலசிவ ..)
29 :
சித்தம் குளிரக் கதிர் அத்தம் வைத்து அமுத
வாயைத்திற அருண்மதி அருணாசலா (அருணாசலசிவ ..)
30 :
சீரை அழித்து நிர்வாணமாச் செய்து அருள்
சீரை அழித்து அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
31 :
சுகக்கடல் பொங்கச் சொல் உணர்வு அடங்கச்
சும்மா பொருந்திடு அங்கு அருணாசலா (அருணாசலசிவ ..)
32 :
சூது செய்து என்னைச் சோதியாது இனி உன்
ஜோதி உருக்காட்டு அருணாசலா 9அ)
33 :
செப்படி வித்தை கற்று இப்படி மயக்கு விட்டு
உருப்படு வித்தை காட்டு அருணாசலா (அருணாசலசிவ ..)
34 :
சேராய் எனில் மெய் நீராய் உருகிக் கண்நீர்
ஆற்று அழிவேன் அருணாசலா (அருணாசலசிவ ..)
35 :
சை எனத் தள்ளில் செய்வினை சுடும் அலால்
உய்வகை ஏது உரை அருணாசலா (அருணாசலசிவ ..)
36 :
சொல்லாது சொலி நீ சொல் அற நில் என்று
சும்மா இருந்தாய் அருணாசலா (அருணாசலசிவ ..)
37 :
சோம்பியாய்ச் சும்மா சுகம் உண்டு உறங்கிடில்
சொல் வேறு என்கதி அருணாசலா (அருணாசலசிவ ..)
38 :
சௌரியம் காட்டினை சழக்கு அற்றது என்றே
சலியாது இருந்தாய் அருணாசலா (அருணாசலசிவ ..)
39 :
ஞமலியில் கேடா நான் என் உறுதியால்
நாடி நின் உறுவேன் அருணாசலா (அருணாசலசிவ ..)
40 :
ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வு அற
ஞானம் தெரித்தருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
41 :
ஞிமிறு போல் நீயும் மலர்ந்திலை என்றே
நேர் நின்றனை என் அருணாசலா (அருணாசலசிவ ..)
42 :
தத்துவம் தெரியாது அத்தனை உற்றாய்
தத்துவம் இது என் அருணாசலா (அருணாசலசிவ ..)
43 :
தானே தானே தத்துவம் இதனைத்
தானே காட்டுவாய் அருணாசலா (அருணாசலசிவ ..)
44 :
திரும்பி அகந்தனைத் தினம் அகக்கண் காண்
தெரியும் என்றனை என் அருணாசலா (அருணாசலசிவ ..)
45 :
தீரம் இல் அகத்தில் தேடி உந்தனை யான்
திரும்ப உற்றென்ன் அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
46 :
துப்பறிவு இல்லா இப்பிறப்பு என் பயன்
ஒப்பிட வாய் ஏன் அருணாசலா (அருணாசலசிவ ..)
47 :
தூய்மன மொழியர் தோயும் உன் மெய் அகம்
தோயவே அருள் என் அருணாசலா (அருணாசலசிவ ..)
48 :
தெய்வம் என்று உன்னைச் சாரவே என்னைச்
சேர ஒழித்தாய் அருணாசலா (அருணாசலசிவ ..)
49 :
தேடாது உற்ற நல் திருவருள் நிதி அகத்
தியக்கம் தீர்த்து அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
50 :
தைரியமோடும் உன் மெய் அகம் நாட யான்
தட்டழிந்தேன் அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
51 :
தொட்டு அருட்கை மெய் கட்டிடாய் எனில் யான்
நட்டமாவேன் அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
52 :
தோடம் இல் நீ அகத்தோடு ஒன்றி என்றும்
சந்தோடம் ஒன்றிட அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
53 :
நகைக்கு இடம் இலை நின் நாடிய எனை அருள்
நகையிட்டுப் பார் நீ அருணாசலா (அருணாசலசிவ ..)
54 :
நாணிலை நாட்ட நானாய் ஒன்றி நீ
தாணுவா நின்றனை அருணாசலா (அருணாசலசிவ ..)
55 :
நின் எரி எரித்து எனை நீறு ஆக்கிடுமுன்
நின் அருள் மழை பொழி அருணாசலா (அருணாசலசிவ ..)
56 :
நீ நான் அறப்புலி நிதம் களிமயமா
நின்றிடும் நிலை அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
57 :
நுன்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட
எண்(ண) அலை இறும் என்று அருணாசலா (அருணாசலசிவ ..)
58 :
நூலறிவு அறியாப் பேதையன் எந்தன்
மால் அறிவு அறுத்து அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
59 :
நெக்கு நெக்கு உருகி யான் புக்கிட உனைப்புகல்
நக்கனா நின்றனை அருணாசலா (அருணாசலசிவ ..)
60 :
நேசம் இல் எனக்கு உன் ஆசையைக் காட்டி நீ
மோசம் செயாது அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
61 :
நைந்து அழி கனியால் நலன் இலை பதத்தில்
நாடி உட்கொள் நலம் அருணாசலா (அருணாசலசிவ ..)
62 :
நொந்திடாது உந்தனைத் தந்து எனைக் கொண்டிலை
அந்தகன் நீ எனக்கு அருணாசலா (அருணாசலசிவ ..)
63 :
நோக்கியே கருதி மெய் தாக்கியே பக்குவம்
ஆக்கி நீ ஆண்டு அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
64 :
பற்றி மால்விடம் தலையுற்று இறுமுனம் அருள்
பற்றிட அருள்புரி அருணாசலா (அருணாசலசிவ ..)
65 :
பார்த்தருள் மால் அறப் பார்த்தினை எனின் அருள்
பார் உனக்கு ஆர் சொல்வர் அருணாசலா (அருணாசலசிவ ..)
66 :
பித்துவிட்டு உனை நேர் பித்தன் ஆக்கினை அருள்
பித்தம் தெளி மருந்து அருணாசலா (அருணாசலசிவ ..)
67 :
பீதிஇல் உனைச் சார் பீதியில் எனைச்சேர்
பீதி உந்தனக்கு ஏன் அருணாசலா (அருணாசலசிவ ..)
68 :
புல்லறிவு ஏது உரை நல்லறிவு ஏது உரை
புல்லிடவே அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
69 :
பூமணம் மா மனம் பூரண மனம் கொளப்
பூரண மனம் அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
70 :
பெயர் நினைத்திடவே பிடித்து இழுத்தனை உன்
பெருமை யார் அறிவர் அருணாசலா (அருணாசலசிவ ..)
71 :
பேய்த்தனம் விட விடாப்பேயாப் பிடித்து எனைப்
பேயன் ஆக்கினை என் அருணாசலா (அருணாசலசிவ ..)
72 :
பைங்கொடியா நான் பற்றின்றி வாடாமல்
பற்றுக் கோடாய்க் கா அருணாசலா (அருணாசலசிவ ..)
73 :
பொடியான் மயக்கி என் போதத்தைப் பறித்து உன்
போதத்தைக் காட்டினை அருணாசலா (அருணாசலசிவ ..)
74 :
போக்கும் வரவும் இல் பொது வெளியினில் அருட்
போராட்டம்காட்டு அருணாசலா (அருணாசலசிவ ..)
75 :
பௌதிகம் ஆம் உடல் பற்று அற்று நாளும் உன்
பவிசு கண்டுற அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
76 :
மலைமருந்து இட நீ மலைத்திடவோ அருள்
மலை மருந்தாய் ஒளிர் அருணாசலா (அருணாசலசிவ ..)
77 :
மானங்கொண்டு உதுபவர் மானத்தை அழித்து
அபிமானமில்லாது ஒளிர் அருணாசலா (அருணாசலசிவ ..)
78 :
மிஞ்சிடில் கெஞ்சிடும் கொஞ்ச அறிவன்யான்
வஞ்சியாது அருள் எனை அருணாசலா (அருணாசலசிவ ..)
79 :
மீகாமன் இல்லாமல் மாகாற்று அலை கலம்
ஆகாமல் காத்தருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
80 :
முடு அடி காணா முடி விடுத்து அனைநேர்
முடுவிடக் கடனிலை அருணாசலா (அருணாசலசிவ ..)
81 :
மூக்கிலன் முன்காட்டும் முகுரம் ஆகாது எனைத்
தூக்கி அணைந்து அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
82 :
மெய்யகத்தின் மன மென்மலர் அணையில் நாம்
மெய் கலந்திட அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
83 :
மேன்மேல் தாழ்ந்திடும் மெல்லியர்ச் சேர்ந்து நீ
மேன்மை உற்றனை என் அருணாசலா (அருணாசலசிவ ..)
84 :
மை மயல் நீத்து அருள் மையினால் உனது உண்மை
வசம் ஆக்கினை அருணாசலா (அருணாசலசிவ ..)
85 :
மொட்டை அடித்தெனை வெட்ட வெளியில் நீ
நட்டம் ஆடினை என் அருணாசலா (அருணாசலசிவ ..)
86 :
மோகம் தவிர்த்து உன் மோகமா வைத்தும் என்
மோகம் தீராய் என் அருணசலா (அருணாசலசிவ ..)
87 :
மௌனியாய்க் கல்போல் மலராது இருந்தால்
மௌனம் இது ஆமோ அருணசலா (அருணாசலசிவ ..)
88 :
யவன் என் வாயில் மன்ணினை அட்டி
என் பிழைப்பு ஒழித்தது அருணசலா (அருணாசலசிவ ..)
89 :
யாரும் அறியாது என் மதியினை மருட்டி
எவர் கொளை கொண்டது அருணசலா (அருணாசலசிவ ..)
90 :
ரமணன் என்று உரைத்தேன் ரோசம் கொளாது
எனை ரமித்திடச் செயவா அருணசலா (அருணாசலசிவ ..)
91 :
ராப்பகல் இல்லா வெறு வெளி வீட்டில்
ரமித்திடுவோம் வா அருணசலா (அருணாசலசிவ ..)
92 :
லட்சியம் வைத்து அருள் அஸ்திரம் விட்டு எனை
பட்சித்தாய் பிராணனோடு அருணசலா (அருணாசலசிவ ..)
93 :
லாபம் நீ இகபரலாபம் இல் எனை உற்று
லாபம் என் உற்றனை அருணாசலா (அருணாசலசிவ ..)
94 :
வரும்படி சொலிலை வந்து என்படிஅள
வருந்திடு உன் தலைவிதி அருணசலா (அருணாசலசிவ ..)
95 :
வாவென்று அகம் புக்கு உன் வாழ்வு அருள் அன்றே
என் வாழ்வு இழந்தேன் அருள் அருணசலா (அருணாசலசிவ ..)
96 :
விட்டிடில் கட்டமாம் விட்டிடாது உனை உயிர்
விட்டிட அருள்புரி அருணசலா (அருணாசலசிவ ..)
97 :
வீடு விட்டு ஈர்த்து உளவீடு புக்குப் பைய உன்
வீடு காட்டினை அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
98 :
வெளிவிட்டேன் உம்செயல் வெறுத்திடாது உன் அருள்
வெளிவிட்டு எனைக்கா அருணாசலா (அருணாசலசிவ ..)
99 :
வேதாந்தத்தே வேறு அற விளங்கும்
வேதப் பொருள் அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
100 :
வைதலை வாழ்த்தா வைத்து அருட்குடியா
வைத்து எனை விடாது அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
101 :
அம்புவில் ஆலிபோல் அன்பு உரு எனில் எனை
அன்பாக் கரைத்து அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
102 :
அருணை என்று எண்ண யான் அருள் கண்ணி பட்டேன்
உன் அருள்வலை தப்புமோ அருணாசலா (அருணாசலசிவ ..)
103 :
சிந்தித்து அருள்படச் சிலந்தி போல் கட்டிச்
சிறையிட்டு உண்டனை அருணாசலா (அருணாசலசிவ ..)
104 :
அன்பொடு உன் நாமம் கேள் அன்பர்தம் அன்பருக்கு
அன்பன் ஆயிட அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
105 :
என்போலும் தீனரை இன்புறக் காத்து நீ
எந்நாளும் வாழ்ந்து அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
106 :
என்புருகு அன்பர்தம் இன் சொற்கொள் செவியும் என்
புன்மொழி கொள அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
107 :
பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப்
பொறுத்து அருள் இஷ்டம் பின் அருணாசலா (அருணாசலசிவ ..)
108 :
மாலையளித்து அருணாசல ரமண என்
மாலை அணிந்து அருள் அருணாசலா (அருணாசலசிவ ..)
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலம் வாழி அன்பர்களும் வாழி
அக்ஷர மணமாலை வாழி.